Thursday, October 15, 2009

போட்டி தேர்வும் எனது அனுபவமும் பாகம் – 1

போட்டி தேர்வும் எனது அனுபவமும் பாகம் – 1

இப்பொழுதெல்லம் அதிக அளவில் அரசாங்க வேலைக்காக
போட்டித்தேர்வுகள் நடத்தபடுகின்றது. நானும் இதெலாம் சும்மா ஒரு கண் துடைப்பு என்றே நினைத்து விட்டுவிடுவேன்.
ஆனால் என் அக்கா விடாமல் இதை போன்ற தேர்வுகளுக்கு apply செய்து மெனக்கட்டு தயார் செய்து கொண்டிருப்பார் .
கடின முயற்சியின் பலனாக மத்திய அரசாங்க வேலைக்கு தேர்வாகி வேலை செய்துக்கொண்டிருகிறார். மேலும் அவருடய
நட்பு வட்டாரதிலும் நிறைய பேர் அரசாங்க பணிகளுக்கு தேர்வாகினர்.


இதன் பிறகு எனக்கும் ஒரு நம்பிக்கை பிறந்து நானும் இதை போன்ற தேர்வுகளுக்கு தயார் செய்யத்தொடங்கினேன். மேலும் நான் பட்டய (electronics) படிப்பு முடித்ததால் அதிக பட்சமாக ரயில்வே தொழில் நுட்ப பணிகளான ரயில் ஓட்டுனர் மற்றும் ஜுனியர் இன்ஜினியர் பதவிகளுக்கே தயார் செய்து எழுத தொடங்கினேன். நான்கு வருடங்களில் 20 – க்கும் மேற்பட்ட
தேர்வுகள் எழுதினேன்


எனது நெருங்கிய நண்பன் ராஜசேகரும் என் கூடவே தேர்வுகளுக்கு தயாரானான். காலேஜ்ஜில் என் கூட படித்த நண்பன். அவன் வீடு திருவள்ளூர் என் வீடு சென்னை
என்பதால் , தேர்வுக்காக அப்ளிகேஷன் ஃபில் அப் பண்னுவது , DD ,postal order Etc.., போன்ற வேலைகள் எல்லாம் என் வீட்டில் தான் நடக்கும்.

கடின முயற்சியின் பலனாக ரயில் ஓட்டுனர் பதவிக்காக ஒருமுறை செகந்திராபாத் (SCR) ரயில்வே டிவிஷனிலும் சென்னை (SR) ரயில்வே டிவிஷனிலும் எழுத்துத் தேர்வில் தேர்வானேன் . செகந்திராபாத்தில் சைகோமெட்ரி தேர்வு எழுதி தேரவில்லை என நினைக்கிறேன் ரிசல்டில் என் நம்பர் இல்லை . த்ற்போது செய்யும் வேலையின் காரணமாக சென்னை ரயில்வேக்கு நான் செல்லவில்லை . இப்பொழுது நினைத்தாலும்
நான் எடுத்த முடிவு தவறா என்ற நினைப்பு மனதில் ஓடும்.
(கால் காசுன்னாலும் கவர்மெண்ட் காசாச்சுங்கல்ளே.......)

த்ற்போது என்னுடைய இன்னுமோர் காலேஜ் நண்பர் தமிழக அரசின் காவல் துறையில் உதவி ஆய்வாளராக
டெக்னிகல் பிரிவில் தேர்வாகி உள்ளார். இன்னுமொறுவர் சென்னை பெட்ரோலியம் நிறுவனதின் கடலூர் பிரிவில் வேலை செய்கிறார்.


இவ்வாறாக தேர்வின் காரணமாக மூன்று முறை ஐதராபத் இரண்டு முறை பங்களூரு மற்றும் தலை நகர் டில்லிக்கு ஒரு முறை நானும் ராஜசேகரும் சென்று வந்தோம்.


பயணங்களின் போது நடந்த கூத்துக்களை தனி பதிவாகவே போடலம். உதாரணத்திற்கு, டெல்லியில் இருந்து தமிழ்நாடு எக்ஸ்ப்ரஸில் திரும்பும் போது விஜயவாட ஸ்டேஷனில் ரயில் நின்று கிளம்பும் போது என் நண்பன் முன்பே ஏறிவிட ரயில் நகர தொடங்க என்னயும் ஏறவிடாமல் தானும் ஏறமுடியமல் கையில் வாழை பழத்துடன் ஒரு பெரியவர் தள்ளாட, ரயில் வேகமெடுக்க ரயில் கூடவே ஓடி நான் அந்த பெரியவரை ஒரு வழியாக உள்ளே பிடித்து தள்ள வாழை பழம் கீழெ விழ பெரியவர் உள்ளே விழ நான் பிளாட்பாரத்லேயே ஓட 3 , 4 பெட்டிகள் என்னை கடந்து செல்ல நான் பயத்திலும் அதிர்சியிலும் கை கால் வெடவெடுக்க முகம் வெளுக்க ஒரு வழியாக முழு சக்தியையும் பிரயோகித்து ஏதோ வந்த ஒரு பெட்டியின் கைபிடியை உத்தேசமாக பிடிதுவிட என் கால்கள் பிளாட்பாரத்தில் தேய
பெட்டி என்னை இழுக்க பெட்டியின் இரண்டு கை பிடியையும் கெட்டிமாக பிடித்துக்கொண்டு ஜம்ப் செய்வது போல் நான் குதிக்க


ஒரு வழியாக அந்த பெட்டியின் மூடிய கதவில் டமார் என்று இடித்து தலை கால் முட்டி எல்லாம் வலிக்க பல்லி போல் அந்த கதவோடு கதவாக ஒட்டிக்கொண்டு மெதுவாக சுய நினைவு வந்தவனாய் சுட்றுபுறத்தை உற்று நோக்க ரயில் மிக வேகமாய் குளிர் காற்று முகதிலறைய கும்மிருட்டில் போய்கொண்ட்ருக்கிறது.

இதெலாம் ஒரு சில கணபொழுதில் நடந்துவிட பதட்டத்துடன் கதவை திறக்க முயற்சி செய்து அது திறக்காமல் என்னை கலாய்க்க கதவின் பக்கத்தில் உள்ள ஜன்னலை பார்க்க அப்பொழுதுதான் கவனித்தேன் நான் ஏறிய பெட்டி மற்றும் அதன் பின்னால் உள்ள பெட்டியின் அனைத்து ஜன்னல் , கதவுகளும் மூடப்பட்டிருகிறது.


ரயில் மிக அதிக வேகத்துடன் செல்ல என் நண்பன் முன் பெட்டியில் நின்று என்னை பார்த்து ஏதோ சொல்கிறான். என் காதில் எதுவுமே விழவில்லை. சீக்கிரம் கதவை திறண்டா நாயே
என அவனை பார்த்து கத்தினேன் . அவனும் உள்ளே சென்று விட்டான் . கதவு திறக்கப்படவே இல்லை . நான் திட்டியதால் சென்று விட்டானோ என்று நினைத்தேன் .

ரயிலுக்கு உள்ளே இன்னும் ஓர் கூத்து நடந்து கொண்டிருப்பது தெரியாமல் நான் ரயிலுக்கு வெளியே அந்த வாழைப்பழ பெரியவரையும் என் நண்பனையும் திட்டிக்கொண்டே நடு நடுவில் கடவுளை வேண்டிக்கொண்டே புலம்பிக்கொண்டிருக்கிறேன்.


இதை இத்துடன் முடித்து மீதியை வேரொரு பதிவில் எழுதுகிறேன். என்னுடைய இப்பதிவின் நோக்கமே போட்டித்தேர்வுக்கு எப்படி தயார் செய்வது எதை தயார் செய்வது என்பதை பட்றித்தான். குறிப்பாக RRB தேர்வுகள்



பொதுவாக வினாக்கள் 100 (அ) 120 இருக்கும்
90 நிமிடங்கள் தேர்வு நேரம் . objective type .
இப்பொழுதெல்லாம் சில பதவிகலுக்கான தேர்வுகள் on-line ல் இணையம் மூலமாக நடத்தப் படுகிறது. RRB இனையத்திலேயே இதற்காண செயல்முறை விளக்கம் உள்ளது.



objective type கேள்விகள், ஒரு வினா 4 விடைகள் என்று இருக்கும் பொதுவாக choose the best answer போல இருக்கும் . choose the best answer கும் choose the correct answer – கும் வித்தியாசங்கள் உள்ளது.

choose the best answer – ல் நான்கு விடைகளுமே சரியாக இருந்தாலும் , இருப்பதில் மிக சரியானதை தேர்வு செய்ய வேண்டும். உதாரனத்திற்கு pi value விடை 22/7 , 3.14 , .. …
மேற் கூரிய இரண்டுமே சரியாக இருந்தாலும் 3.14 – யே தேர்வு செய்ய வேண்டும் .
choose the correct answer – ல் ஒரு விடை மட்டுமே சரியானதாக இருக்கும் ,



பொதுவாக கீழ் உள்ளவட்றில் இருந்து வினாகள் வரலாம்

1 Mathematical ability (quanitative aptitude)
2 Reasoning ability
3 General knowledge
4 Generak awareness
5 History
6 Geography
7 Every day science
8 Sports
9 Political science
10 Day to day events , incidents , news




இப்பொழுது Mathematical ability (quanitative aptitude) – ல்
என்னென்ன வரும் என்று பார்க்கல்ளாம்

• Basic maths
o Addition
o Subtraction
o Division
o Multiplication
o Fraction
o Square and square root
• Ratio and proportion
• Average
• Percentage
• Partnership
• Profit and loss
• Time and work
• Time and distance
• Boats and stream
• Pipes and cisterns
• Simple interest and compound interest

மேலே உள்ளவட்றை பற்றி ஒவ்வொன்றாக வரும் பதிவுகளில் பார்ப்போம்

Wednesday, October 14, 2009

என் கண்ணே என் மணியே

என் உயிரே என் சொக்க தங்கமே

கருத்தறிந்த காலத்திலே காதலுற்றேன் உன்பால்

களத்தினிலே காத்திருப்போர் கணக்கில்லை என்றாய்

பேராசை பேரிழப்பு என்றாலும்

பெருகுகிறது பெருங்காதல் உன்மேல்

அரசனும் அலைகிறான் ஆண்டியும் அலைகிறான் என்றாய்

கலங்கவில்லை நான் காத்திருக்கிறேன் காமுற்று

கிடைக்காதலால் கருவுகிறேன் உனை கவர்வதற்கு

நேர் வழியில் உனை அடைவது பெரும்பேறு

புற வழியில் உனை அடைவது பெரும்பாடு

புகழழிந்தாலும் புறவழி முயற்சி முந்துகிறது

உன்னை அடைந்தாலும் அடங்கவில்லை ஆசை

நீ இருப்பதால் கெடுகிறான் கிழவனும்

நீ இல்லாதலால் தேடி கெடுகிறான் குமரனும்

மறை பொருளாய் இருக்கிறாய் நீ மானிடர்க்கு

மறை பொருளான உன்னை அடைந்தவர்கள் மறைந்தார்கள்

உண்மை மறை பொருளை கண்டவர்கள் வாழ்ந்தார்கள்

தொண்டு கிழமாகி இந்த உண்மை தெரிந்தாலும்

உன் மேல் கொண்ட காதல் குறையவில்லை

உன்னை அடையவே மனம் ஏங்குகிறது

மறைபொருளான உன் பேர் பணம், பொருள்

பழகு தமிழில் துட்டு அல்லது காசு

என் கண்ணே என் மணியே

என் உயிரே என் சொக்க தங்கமே

Friday, September 18, 2009

உன்னை போல் ஒருவன் (நிழலானவன்)

உன்னை போல் ஒருவன் (நிழலானவன் )

ஆதியாய் நான்
அந்தமாய் நீ
உலகம் உணர்ந்த உண்மை நான்
வில(ள)க்க முடியா பொய்மை நீ

என் ஜனனம் உன் முகவுரை
என் பெரும் பயணம் உன் முடிவுரை
ஜனனம் நான் ஜடம் நீ
ஜடமானாலும் ஜவ்வாது நீ
ஜனனித்தாலும் ஜடம் நான்
என் மரணத்தினூடே மறைகிறாய்


நான் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும்
வருவதும் போவதும் உன் இயல்பு
சில வருகைகளில் என்னை விட பெரியவனாய்
சில வருகைகளில் என்னை விட சிரியவனாய்
பெரியவன் ஆனாலும் மமதை இல்லை உன்னிடம்
சிரியவன் ஆனாலும் சிறுமை இல்லை உன்னிடம்


மலையானாலும் மடுவானாலும்
எளியோனானாலும் வளியோனானாலும்
அறிவாளியானாலும் அறிவிலியானாலும்
கோனானாலும் கோவணாண்டி ஆனாலும்
இரண்டுமே ஒன்றுதான் உனக்கு


தவறுகள் செய்து யாரும் கானவில்லை என
மனம் கலிப்படையும் போது – கலங்குகிறது கர்ப்பம்
கன கச்சிதமாய் நீ தொடர்வது கண்டு
சில கணப்பொழுதில் கலைகிறது அந்த கலக்கம்
உன்னால் என்ன செய்ய முடியும் என நினைக்கும் போது
மறு கணமே மனம் மறுண்டு இருள் கவ்வுகிறது
இருளே வடிவானாலும் – விடிவெள்ளியாய் நீ


உன்னை போல் ஏற்ற தாழ்வற்று
விருப்பு வெருப்பு அற்று
உண்மையாய் இருந்தாலும் பொய்யாய் நான்
பொய்யாய் இருந்தாலும் உண்மையாய் நீ


எவ்வளவு முயற்சி செய்தாலும்
முடியாது என்னால் – உன்னை போல் இருக்க
எவ்வளவு முயற்சி செய்தாலும்
முடியாது உன்னால் – என்னை போல் இருக்க


ஆம்

மனிதன் நான் மரப்பாச்சி நீ
உண்மை நான் பொய்மை நீ
நிஜமாய் நான் நிழலாய் நீ

Monday, September 14, 2009

ஒரு கவிதை ????? ஹி ஹி ஹி ...................திட்டாதீங்கோ

நட்சத்திரங்களாய் மாறிட நினைக்கிறேன் நீலவானமாய் நீ

அல்லியாய் மாறிட அவசரப்படுகிறேன் - அம்புலியாய் நீ

சறுகாய் காய்ந்திட கதறுகிறேன் - மிதிப்பது நீ

தாமரை தடாகமாக தகிக்கிறேன் - தாமரையாய் நீ

விட்டில் பூச்சியாக விழுகிறேன் விளக்காய் நீ

சிற்பமாய் மாறிட சிந்தை கொண்டேன் சிற்றுளியாய் நீ

கண் இமையாய் மாறிட கனா கண்டேன் கண்மணியாய் நீ

மழை துளியாய் மாறிட முனைந்திட்டேன் நனைவது நீ

முகதிலறையும் காற்றாய் கலந்திடுவேன் ஜன்னலோரத்தில் நீ

வானவில்லாய் வளைந்திட விழைகிறேன் வர்ணங்களாய் நீ

மரணத்தை முத்தமிட முந்துகிறேன் கடவுளாய் நீ

நானாக நானிருக்க நன்றி சொல்வேன் நீயாக நீ

பயம் , கவலை

எனது முதல் தமிழ் பதிவு

எழுத்து பிழைக்கு மன்னிக்கவும்.........


மனிதனின் எதிரிகள் இரண்டு

1. பயம் 2. கவலை

பயம் வலுபடைந்த வியாதி. கவலை மெல்ல அரிகும் நோய்.

பயதாலும் கவலையாலும் மனிதன் தன் வாழ்க்கையை நரகமாக்கி கொள்கிறான். சூழ்திருப்போரின் வாழ்வையும் கெடுக்கிறான் .

அன்சுவதன்சாமை பேதமை என்றார் திருவள்ளுவர்

பயபடக்கூடிய விஷயங்கலுக்கு நாம் பயபட வேண்டும்.

அதை விட்டு விட்டு எதற்கு எடுதாலும் பயபடுதல் பேதயின் செயலாகும்.

“ பயம் பெரும்பாலும் நம் கற்பனையில் விளைவது “.

எதிர் காலதில் நிகழ போகிற ஒன்றை “இப்படி போகுமோ ??

அப்படி நடக்குமோ “ என்று பற்பல கற்பனையில் அவதி படுவதே பயம். நான்கு முறை இதே பாதையில் சிந்திக்க

துவங்கியதும் பயம் நமது இயல்பாக , பழக்கமாக மாறிவிடுகிறது.

பெரும்பாலான பயம் அனைத்தும் நமது அசாதாரண கற்பனையில் விளைவது

ஒரு சம்பவம் நிகழும் முன் நமது பயங்களை எழுதி வைத்து பின்னர் அவற்றை படித்து பார்த்தால் எப்படி உப்பு பெறாத விஷயங்களுக்கெல்லாம் நாம் பயந்து இருக்கிறோம் என்று தெரியவரும். பயம் மனித இலட்சியத்தை அடியில் லேசாக குழி பறிக்கும் இயல்புடையது. மனித நம்பிக்கையை அசைக்க முடியாத தைரியத்தை ஆட்டங்கான வைக்கும் இயபுடையது.

நோயினால் சாகும் முன் சாவின் பயத்தினால் மனிதர்கள் மாண்டிருக்கிறார்கள். எதிரியால் தோற்கடிக்கப்படும் முன்

வெறும் பயத்தால் தோற்றிருக்கிறார்கள்.

பயம் ஒரு நஞ்சு , விஷம் . நமது உடலில் பலத்த மாறுபாட்டை அது உண்டு பன்னுகிறது ,

உடலில் சக்கரையின் அளவை அதிக படுத்தி இதய துடிப்பயும் மிகை படுத்துகிறது . சீரான உடலியக்கத்தை கெடுக்கிறது

பயம் உண்மையாக இருக்கலாம்

அல்லது கற்பனையில் இருக்கலாம்

நாம் நம்புவதற்கேற்ப நம் உடல் மாறுபடுகிறது.

எதை கண்டு பயபடுகிறோமோ அதை முதலில் செய்ய

துவங்குங்கள் , பயம் செத்து போவதை காண்பீர்கள் “

என்று எமர்சன் கூறுகிறார்

இரு வகைகளில் பயத்தை போக்கலாம்.

முதலாவதாக

ஏன் பயபடுகிறோம் ?? ஏன் பயபட வேண்டும் ??

தலயா போய்விடும் ?? என்று தீவிரமாக பயத்தை அஃகு வேராக ஆணி வேராக அலசுவது முதல் வழி . அலசினால் காரணமில்லாததிற்கு நாம் பயபடுவது தெரியும்.

இரண்டாவதாக ,

எதை கண்டு பயபடுகிறோமோ

அதில் சிறிது சிறிதாக நுழைந்து

காரியங்களை செய்ய துவங்குவது

“ செயலே பயத்தை போக்கும் அரு மருந்து “

பயம் நெஞ்சை கவ்விக்கொண்டு இருக்கும் போது

அதை அப்புறபடுத்துவது எளிதல்ல

“ நம்பிக்கையே பயத்தின் மாற்று “

பயத்திற்கு நேர் மாறான , தைரியமான எண்ணங்களை

மனதிற்குள் விடுவது , அதை பற்றி சிந்திப்பது நல்ல பயனை தரும். பயம் ஒரு எண்ணம். அதை அகற்றி நம்பிக்கை, துணிவு

என்ற மாற்று எண்ணங்களை வைக்காதவரை பயமே நம்மை விரட்டி அடித்துக்கொண்டிருக்கும்.

“ எந்த நேரமும், எந்த நிமிடமும் எதற்கும் தயார் என்ற மனப்பக்குவத்தை வளர்த்துக்கொள்ளுங்கள். எதை நினைத்தும்

எப்போதும் அச்சப்படாட்தீர்கள். இந்த நிலையை எட்டி விட்டால்

மன சஞ்சலம் ஓடிப்போய் விடும்.

அடுத்து கவலையை பற்றி மற்றுமோர் பதிவில் பார்போம்.



Monday, June 08, 2009



Abisheka of Gomateeswarar

Mahamasthabisheka of Gomateeswarar
Night view of Gomatagiri in saravanabelagola - Mysore

கோமடேஸ்வர் சிற்பம்


Gomatagiri in saravanabelagola - Mysore